பெரம்பலூர்

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி: 3 பேர் கைது

DIN

பெரம்பலூர் நகரில், கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேரை  போலீஸார் கைது செய்தனர். 
பெரம்பலூர் அருகிலுள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன்  கௌதம் (26). இவர், பெரம்பலூரிலுள்ள வணிக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  
ஞாயிற்றுக்கிழமை இரவு பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் கௌதம் நடந்து சென்றபோது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதோடு கொலை மிரட்டல் விடுத்தனராம். 
இதுகுறித்து கௌதம் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிந்து, பெரம்பலூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அரணாரை பாஸ்கர் மகன் பார்த்திபன் (22), பெரம்பலூர்- ஆலம்பாடி சாலை சமத்துவபுரம் மணி மகன் சுரேஷ் (24), பெரம்பலூர் ஜமாலியா நகர் நடராஜன் மகன் மகேந்திரன் (18) என்பது தெரியவந்தது. 
இதையடுத்து,3பேரையும் கைது செய்த போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT