பெரம்பலூர் அருகிலுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், தப்பாட்டக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல், இனிப்புகள் வழங்கப்பட்டது. ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், சுற்றுலாத்துறை உதவி அலுவலர் எஸ். வரதராஜன், அறநிலையத்துறை கோயில் நிர்வாக கணக்கர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.