பெரம்பலூர்

அரசுப் போக்குவரத்து பணிமனையில் குடிநீர் இயந்திரம்

DIN

பெரம்பலூர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணி மனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 8.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 
சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்க ரூ. 8.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் அரசுப் போக்குவரத்து பணிமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன், சுத்திகரிக்கப்படட குடிநீர் இயந்திர அறையையும், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தையும் தொடங்கி வைத்தனர்.  
நிகழ்ச்சியில், பணிமனை கோட்ட மேலாளர் புகழேந்தி, தொழில்நுட்ப துணை மேலாளர் சிங்காரவேலு, கிளை மேலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT