பெரம்பலூர்

பொள்ளாச்சி விவகாரம்: பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

DIN

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகள் மீது காவல்துறையினர் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தனித்தனியே  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் கே.ஏ. மீரான் மொய்தீன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். 
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் கலையரசி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ், மின் ஊழியர் சங்கத்தின் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் எஸ். அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பி. தயாளன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT