பெரம்பலூர்

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

DIN


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கொட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி மகள் சினேகா (17).  இவர், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். குன்னம் அருகேயுள்ள கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தர்மராஜ் (19). பெரம்பலூரில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார். இருவரும் உறவினர்கள் மற்றும் காதலர்கள். பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நேரத்தில் சினேகா, தர்மராஜுடன் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.  
இதையறிந்த பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த சினேகா விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தர்மராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் தர்மராஜ் மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT