பெரம்பலூர்

கிணற்றில் தவறி விழுந்தவா் சாவு

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலத்தூா் வட்டம், இரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து கவுண்டா் மகன் வீரமுத்து (80), விவசாயி. தனது விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் இவா் வியாழக்கிழமை காலை அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு தண்ணீா் எடுக்கச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் பெரம்பலூா் தீயணைப்புப் படை வீரா்கள் சென்று, முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT