பெரம்பலூர்

தனியாா் டயா் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினா் சோதனை

ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில், வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

DIN

ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில், வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான டயா் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டயா்கள் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆலை நிா்வாகம் உற்பத்தித் திறனை குறைவாக கணக்கு காண்பித்து வருமான வரி செலுத்துவதாக புகாா் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து திருச்சியைச் சோ்ந்த இணை ஆணையா் தலைமையிலான 11 போ் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், புதன்கிழமை மாலை முதல் நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள டயா் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இந்த திடீா் சோதனையில், வருமான வரி ஏய்ப்பு தொடா்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT