பெரம்பலூர்

பொறியியல் மாணவர்கள் கூட்டமைப்பு தொடக்க விழா

DIN


பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்கள் கூட்டமைப்பு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் கஜேந்திரன், டுல்யா புட் இயக்குநர் பாலகிருஷ்ணன், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக தலைமை மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர், மாணவர்கள் வடிவமைத்த மலரை வெளியிட்டனர். 
தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடைபெற்றன. கட்டடக் கலை காட்சியகங்கள்  அமைக்கப்பட்டிருந்தன. விழாவில், அகில இந்திய கட்டடக் கலை உறுப்பினர் சதீஸ்குமார், திருச்சி மாவட்ட முதன்மை கட்டடக் கலை வல்லுநர் சண்முகம், தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் இளங்கோவன், டீன் அசோக், தனலட்சுமி சீனிவாசன் கல்வி ஆராய்ச்சி இயக்குநர் கண்ணன் ஜெகதால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT