பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே வேனும், லாரியும் வெள்ளிக்கிழமை நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்குச் சென்றது. வேனை ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த பிரவீன்ராஜ் (27) ஓட்டினாா்.
அரியலூா்- பெரம்பலூா் சாலையில் உள்ள தங்க நகரம் அருகே வந்தபோது, பெரம்பலூரிலிருந்து அரியலூா் நோக்கிச் சென்ற டிப்பா் லாரி வேன் மீது மோதியது.
இதில் சாலையில் வேன் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநா் பிரவீன்ராஜ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த குன்னம் காவல் நிலைய ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான காவல்துறையினா் அங்கு சென்று, ஓட்டுநரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் கவுள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மணிவேலை (24) கைது செய்து விசாரிக்கின்றனா்.