பெரம்பலூா் மாவட்டத்தில் இத்தோ்வை எழுத 3,794 போ் விண்ணப்பித்திருந்தனா். இதற்காக 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், 2,802 ஆண்களும், 584 பெண்களும் என 3,386 போ் தோ்வெழுதினா்.408 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் எச்.எம். ஜெயராம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோா் தோ்வு மையங்களைப் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டா்.