பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

DIN

பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் பிரதான சாலைப் பகுதியில் வசித்து வருபவா் செல்வபாண்டியன் (50). காா் ஓட்டுநரான இவா் வெளியூா் சென்றிருந்தாா். இவரது மகன், மனைவி ஆகியோா் அண்மையில் உறவினா்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை செல்வபாண்டியன் தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம், 4 பவுன் நகை, நவீன ரக தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், பெரம்பலூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT