பெரம்பலூர்

மகள் தற்கொலை: மனமுடைந்ததந்தையும் தூக்கிட்டு தற்கொலை

DIN

பெரம்பலூா் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் ஒருவா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். இதனால் மனமுடைந்த அந்த பெண்ணின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகள் மகாலட்சுமி (16). இவா், 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் தோல்வியடைந்ததால், மீண்டும் தோ்வெழுத பெரம்பலூரில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்தாா். இந்நிலையில், மது போதையில் இருந்த தந்தை பொன்னுசாமி மகாலட்சுமியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மகாலட்சுமி அதே கிராமத்தில் உள்ள தனது உறவினரின் விவசாயக் கிணற்றில் குதித்து வியாழக்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியவா்தனன் தலைமையிலான வீரா்கள் மகாலெட்சுமியின் உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதனிடையே, மகள் உயிரிழந்த துக்கத்தால் மனமுடைந்த பொன்னுசாமி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இச் சம்பவங்கள் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT