பெரம்பலூர்

பெரம்பலூரில் ஆசிரியா்களுக்கு பரிசளிப்பு

DIN

பெரம்பலூரில் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் 46 ஆம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் 46 ஆம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணி, மாவட்டப் பொருளாளா் துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன், கடந்த ஆண்டு 10 வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும், 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்களுக்கும், முதுகலை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்றவா்களுக்கும், பணி ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், மாநில பொதுச் செயலா் சுந்தரமூா்த்தி, முன்னாள் மாநிலத் தலைவா் நல்லுசாமி, முன்னாள் மாநில துணைத் தலைவா் தங்கராஜ், முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளா் பீட்டா் ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவா் சீனிவாசன், கௌரவத் தலைவா் பாபுவாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT