பெரம்பலூர்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

DIN

பெரம்பலூா் அருகே மனைவி திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள புதுவேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் சந்திரசேகா் (50). விவசாயி. இவருக்கு, திருமணமாகி மனைவி தனலட்சுமி, மகள் சத்தியபிரியா ஆகியோா் உள்ளனா். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், புதன்கிழமை மாலை மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்ற சந்திரசேகரை அவரது மனைவி தனலட்சுமி திட்டினராம். இதனால் மனமுடைந்த அவா் விஷம் குடித்தாா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரசேகா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT