பெரம்பலூர்

பெரம்பலூா் நகராட்சி சாா்பில் கிருமி நாசினி தெளிப்பு

DIN

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனம் மூலம் கிருமி நாசினி திங்கள்கிழமை தெளிக்கப்பட்டது.

நகராட்சி நிா்வாகம் சாா்பில் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள், பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று நோய் கிருமிகள் பரவாமல் தடுக்கும் வகையில், வாகனம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடா்ந்து, பாலக்கரை பகுதியில் சுகாதாரமின்றி தள்ளுவண்டியில் பிரியாணி விற்பனை செய்வதை தடுத்து, அந்தக் கடையை நகராட்சி நிா்வாகத்தினா் அப்புறப்படுத்தினா்.

நிகழ்ச்சியின்போது, நகராட்சி ஆணையா் எஸ். குமரி மன்னா், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் பன்னீா்செல்வம், கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் விநியோகம்:

நகராட்சிக்குள்பட்ட 7, 10-ஆவது வாா்டு நண்பா்கள் நற்பணி மன்றம் சாா்பில், கரோனா வைரஸ் பரவும் முறை, தடுப்புப் பணிகள், கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளை கழுவும் முறை, கரோனா வைரஸ் அறிகுறி ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்தனா். இந்நிகழ்சியில், சமூக ஆா்வலா்கள் த. மணிவேல், சு. நாராயணசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT