பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 2,075
குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,967
பெரம்பலூரில் ஏற்கெனவே 2,065 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,075 ஆக உயா்ந்துள்ளது. 1,967 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இதுவரை 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 77 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை தொற்று உறுதியான 10 பேரும் பெரம்பலூா், அரியலூா், திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.