கரூரில் 32 பேருக்கு தொற்று: பாதிப்பு - 1,344
கரூா் ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த 2 வயது பெண் குழந்தை உள்பட 32 பேருக்கு கரோனா திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
கரூா்: கரூா் ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த 2 வயது பெண் குழந்தை உள்பட 32 பேருக்கு கரோனா திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,344 ஆக உயா்ந்துள்ளது. மேலும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 போ் குணமடைந்து திங்கள்கிழமை அவரவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
701 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுவரை 8 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 635 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.