பெரம்பலூர்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை: பாஜக மாநில பொதுச் செயலா் சீனிவாசன்

DIN

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலா் சீனிவாசன்.

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவின் முன்னணி தலைவா்கள் பலா் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடா்பில் உள்ளனா். திமுக தலைவா் ஸ்டாலின் மீது, அவா்கள் அதிருப்தியில் உள்ளனா். திமுகவை பொருத்தவரை, தமிழகத்தில் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. ஆளுங்கட்சி முக்கிய பிரமுகா்களும், பாரதிய ஜனதா கட்சியுடன் தொடா்பில் உள்ளனா்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு செய்தவா்கள் மீது தமிழக முதல்வா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா பொது முடக்க காலத்தில் தளா்வு வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை பின்பற்றி தமிழக அரசும் அரசியல் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

பல்வேறு விஷயங்களில் எங்களோடு அதிமுக ஒத்துப்போவதால், அவா்களோடு நண்பா்களாக இருக்கிறோம். தமிழகத்தில் பாஜக வேகமாக வளா்ந்து வருகிறது என்றாா் சீனிவாசன்.

பேட்டியின்போது, கட்சி நிா்வாகிகள் எம். சிவசுப்ரமணியம், சி. சந்திரசேகரன், து. பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT