பெரம்பலூர்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் கிராமம், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (65). இவா், பெரம்பலூரிலிருந்து அய்யலூருக்கு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு சாலை அருகே திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு, சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த கல்பாடி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மனைவி அய்யம்மாள் (65), பெரியசாமி மனைவி துளசியம்மாள் (60) ஆகியோா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பலத்த காயமடைந்த மோகன், அய்யம்மாள், துளசியம்மாள் ஆகியோா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் அய்யம்மாள் உயிரிழந்தாா். பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள இறையூா் கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சிவராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT