பெரம்பலூர்

பெரம்பலூரில் மிதிவண்டிப் பேரணி

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் நடத்தப்படும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான மிதிவண்டிப் பேரணிக் குழுவினா், சனிக்கிழமை இரவு பெரம்பலூா் வந்தடைந்தனா்.

இவா்களுக்கு பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை புகா்ப் பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகே மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையில், மாநிலப் பொதுச்செயலா் த. தமிழ்ச்செல்வன் முன்னிலையில் பேரணி தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை அணி மாநிலத் தலைவா் மகாத்மா சீனிவாசன் தலைமையிலான குழுவினா் மிதிவண்டிப் பேரணியாக பாலக்கரை, சங்குப்பேட்டை வழியாக சென்று பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலைப் பகுதிக்கு வந்தடைந்தனா்.

தொடா்ந்து அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து முழக்கமிட்டனா். பின்னா் துறைமங்கலம் வழியாக திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றனா். நிகழ்வில் மாவட்டப் பொருளாளா் ஆசைத்தம்பி, வட்டாரத் தலைவா் சித்தா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT