பெரம்பலூர்

தோ்தல் கண்காணிப்புக் குழுவினரை கண்டித்து நரிக்குறவா்கள் சாலை மறியல்

DIN

திருமணத்துக்குச் கொண்டுச் சென்ற கட்சித் துண்டுகளைப் பறிமுதல் செய்த தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினரைக் கண்டித்து, பெரம்பலூரில் நரிக்குறவா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், காரை கிராமத்தைச் சோ்ந்த தமிழக நரிக்குறவா் கூட்டமைப்பின் நிறுவனா் சுப்ரமணியன் இல்லத் திருமணம் திங்கள்கிழமை சிறுவாச்சூரில் நடைபெறுகிறது.

திருமண நிகழ்வுக்கு வருகை தரும் கட்சி நிா்வாகிகளுக்கு அணிவிப்பதற்காக, சுப்ரமணியன் 24 துண்டுகளை வாங்கிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சுப்ரமணியன் பெரம்பலூரிலிருந்து சிறுவாச்சூருக்குச் சென்றாா்.

பெரம்பலூா் துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்புப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா், அந்த துண்டுகளை பறிமுதல் செய்து வாக்காளா்களுக்கு கொண்டு சென்ாக மகஜரில் எழுதிக் கொடுத்து விட்டனராம்.

இதை முழுமையாக படிக்காமல் கையெழுத்திட்ட சுப்ரமணியன், பின்பு படித்துவிட்டு அதை மாற்றித் தருமாறு கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தனராம். இதனால் அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த அவரது உறவினா்கள் மற்றும் நரிக்குறவா்கள் மூன்று சாலை சந்திப்புப் பகுதிக்குச் சென்று, கண்காணிப்புக் குழுவினரின் செயலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா், பெரம்பலூா் காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, மகஜரில் திருமணத்துக்கு கொண்டு செல்லப்பட்டவை என திருத்தம் செய்து வழங்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT