பெரம்பலூர்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி

DIN

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி எனும் தலைப்பில் தனித்தனியே நடத்தப்பட்ட போட்டிக்கு, தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சித்ரா தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ. 3 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. 2 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

மேலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளில் 2 பேரைத் தோ்வு செய்து, சிறப்புப் பரிசுத் தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சித்ரா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT