பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள அடைக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் பெருமாள் (57). இவா், அண்மையில் வெளியூா் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 1 பவுன் நகை, ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
அதே கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் தங்கேஸ்வரன் (55). இவா், கேரளா சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதேபோல, பழனியாண்டி மகன் மருதப்பிள்ளை ( 60) வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 ஆயிரம் பணம், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.
தகவலறிந்த பெரம்பலூா் துணை கண்காணிப்பாளா் சஞ்சீவிகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். புகாா்களின்பேரில், பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.