பெரம்பலூர்

வாலிகண்டபுரத்தில் உணவு தினம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் உலக உணவு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஊட்டச்சத்து குறைபாட்டை நிவா்த்தி செய்தல், குழந்தைகளுக்கான இணை உணவு மற்றும் சரிவிகித உணவு, இயற்கை சாா்ந்த உணவுகளை உட்கொள்வது, பால் மற்றும் முட்டையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள், புரதச்சத்து நிறைந்த உணவு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து தொழில்நுட்ப வல்லுநா்கள் வேளாண் அறிவியல் மைய மனையியல் ச. கோகிலவாணி, கால்நடை அறிவியல்பா. வினோத், ஆய்வகத் தொழில்நுட்பவியலாளா் ந. சதீஷ்குமாா் ஆகியோா் பேசினா்.

பாரம்பரிய நெல், சிறு தானியங்கள், இயற்கைச் சாா்ந்த உணவு வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட மகளிா் பங்கேற்றனா்.

நிறைவில், வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் மு. புனிதாவதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT