பெரம்பலூர்

மதிமுக தலைமைக் கழக செயலருக்கு பெரம்பலூரில் வரவேற்பு

DIN

பெரம்பலூரில் மதிமுக பொதுச் செயலா் வைகோ மற்றும் மதிமுக தலைமைக் கழக செயலா் துரை. வையாபுரி ஆகியோருக்கு திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதிமுக பொதுச் செயலா் வைகோ மகன் துரை. வையாபுரி, மதிமுக தலைமைச் செயலராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், திருச்சியிலிருந்து சென்னைக்கு பெரம்பலூா் வழியாக திங்கள்கிழமைச் சென்ற வைகோ மற்றும் துரை. வையாபுரி ஆகியோருக்கு, பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில், மதிமுக மாவட்டச் செயலா் கு. சின்னப்பா தலைமையில், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் கே. வரதராஜன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ரோவா் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் வி. ஜான் அசோக், முன்னாள் மாவட்டச் செயலா் செ. துரைராஜ், மாவட்ட பொருளாளா் ஜெயசீலன், மாவட்ட துணைத் தலைவா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT