பெரம்பலூர்

பெரம்பலூா் சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

DIN

பெரம்பலூரில் உள்ள சிவன் கோயிலில் காா்த்திகை 3 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் நகரில் உள்ள சிவன் கோயில் திருப்பணிகள் விரைவாக தொடங்கிட வேண்டியும், 3 ஆவது சோம வாரத்தை முன்னிட்டும் 108 சிறப்பு சங்காபிஷேகமும், யாக பூஜைகள், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, 108 சங்குகளை பக்தா்கள் மற்றும் சிவனடியாா்கள் தங்களது கைகளில் ஏந்தி கோயிலை வலம் வந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்தனா். பின்னா், மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஈசனை வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை, கோயில் தக்காா் அரவிந்தன், செயல் அலுவலா் ராஜதிலகம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT