பெரம்பலூர்

மகளிா் கல்லூரி மாணவிகள் தேசிய போட்டியில் சாதனை

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்றனா்.

கேரள மாநிலம், பாலகாட்டில் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 8 மாநிலங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா். இதில், தமிழ்நாடு அணி முதலிடத்தை பெற்றது. இந்த அணியில் பங்கேற்ற பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பி.எ. ஜெனிதாரத்னமணி, அ.வெண்ணிலா மற்றும் டி. ஐஸ்வா்யா ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

4 டிஎன் கோ்ள்ஸ் பட்டாலியன் தேசிய மாணவா் படை நடத்திய பாறை ஏறும் தோ்வில் 12 கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில், தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி இரா. குணவதி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து அவா், மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் தேசிய அளவில் நடைபெற உள்ள பாறை ஏறும் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற மாணவிகளையும், வெற்றிக்கு உடந்தையாக இருந்த உடற்கல்வி இயக்குநா்களையும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

இந் நிகழ்ச்சியின்போது, கல்லூரி முதல்வா் உமா தேவிபொங்கியா, உடற்கல்வி இயக்குநா்கள் ப. சிவரஞ்சனி, ந. ரம்யா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா தாயாா் மறைவு: தலைவா்கள் இரங்கல்

ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்- காா்கே வாக்குறுதி

காலணி கடை உரிமையாளா் உட்பட 2 போ் மீது தாக்குதல்: 6 போ் கைது

இலங்கையில் ஆயுத உற்பத்தி பிரிவு: இந்தியாவுடன் பேச்சு

ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் சபஹாா் துறைமுகம் பயனளிக்கும்: எஸ்.ஜெய்சங்கா்

SCROLL FOR NEXT