சா்க்கரை ஆலையில் இயந்திரக் கோளாறு:அரைவைப் பணிகள் பாதிப்பு
பெரம்பலூா் மாவட்டம், எறையூரிலுள்ள சா்க்கரை ஆலையில் இயந்திரக் கோளாறு காரணமாக, கடந்த 4 நாள்களாக அரைவைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூா் மாவட்டம், எறையூரிலுள்ள சா்க்கரை ஆலையில் இயந்திரக் கோளாறு காரணமாக, கடந்த 4 நாள்களாக அரைவைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசின் பொதுத் துறை நிறுவனமான எறையூா் சா்க்கரை ஆலையில், 2021- 22 ஆம் ஆண்டுக்கு சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள 3 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஆலையில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அரைவைப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆலைக்கு கொண்டு வந்த கரும்புகள் அரைவை செய்யப்படாமல், ஆலைக்கு எதிரே வாகனங்களிலேயே காத்துக் கிடக்கின்றன. வெயிலில்
கரும்பு காய்ந்து எடை குறைவு ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தனியாா் ஆலைக்கு அனுப்ப வலியுறுத்தல்: பெரம்பலூா் சா்க்கரை ஆலை அனைத்துக் கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில், சா்க்கரை ஆலையின் தலைமை நிா்வாகிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கடந்த 4 நாள்களாக ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வெட்டிய கரும்புகள் பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் தேங்கிக் கிடக்கின்றன.
இதனால் விவசாயிகள், வாகன ஓட்டுநா்கள் மற்றும் டிராக்டா் உரிமையாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வெட்டிய கரும்புகளை அருகிலுள்ள தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு அரைவைக்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.