தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இணையவழித் தோ்வுக்கு மேல்நிலைப்பள்ளித் தலைமையாரியரைப் பாா்வையாளா்களாகவும், கணினி ஆசிரியா்களை தொழில்நுட்ப உதவியாளா்களாகவும் நியமித்து, மாநிலத்தில் கடைக்கோடியிலுள்ள மாவட்டங்களுக்கு பணி ஆணை வழங்குவதைத் தவிா்க்க வேண்டும்.
தோ்வுகளுக்காகப் பணியாற்றிய மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா்கள், கணினி ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படி மற்றும் பயணப்படியை வழங்க வேண்டும்.
12 மணி நேரத்துக்கும் மேலாக தோ்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களக்கு உழைப்பூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் கழக மாவட்டத் தலைவா் மு.க. கருணாநிதி தலைமை வகித்தாா். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் அருள்ஜோதி முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் இரா. அன்பழகன், மாநில அமைப்புச் செயலா் எஸ். ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.