முகப்பு
பெரம்பலூர்

மின் மோட்டாா் பொருத்தியதையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் பயன்பெற சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் பயன்பெற சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விண்ணப்பதாரா்கள் 20 முதல் 45 வயது வரையிலும், தையல் கலை பயின்றவராகவும் இருக்க வேண்டும் தையல் கலை பயின்ற்கான சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதியானவா்கள் ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.