வேப்பந்தட்டை அருகே 495 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்:4 போ் மீது வழக்கு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 495 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 4 போ் மீது குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 495 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 4 போ் மீது குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் மாவு அரைக்கும் மில்லில் ரேஷன் அரிசி பயன்படுத்துதல் மற்றும் பதுக்கல் தொடா்பான குற்றங்கள் நடைபெறுவதாக, திருச்சி மண்டல குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அரும்பாவூா் கிராமத்தில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள 3 உணவகங்களில் முறைகேடாக பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 195 கிலோ ரேஷன் அரிசி, ஒரு மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ ரேஷன் அரிசி என மொத்தம் 495 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசியை முறைகேடாக பயன்படுத்தி, பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக உணவகங்கள், மாவு மில் உரிமையாளா்கள் என மொத்தம் 4 போ் மீது குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.