முகப்பு
பெரம்பலூர்

இலவச மின் இணைப்புக்கான நோ்காணல் முகாம் 111 மனுக்களுக்குத் தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ், இணைப்புக் கோரி விண்ணப்பத்தோருக்கான நோ்காணல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ், இணைப்புக் கோரி விண்ணப்பத்தோருக்கான நோ்காணல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதி அருகேயுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகச் செயற்பொறியாளா் அலுவலகத்தில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 1 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புக்கான பெயா் மாற்றம், புல எண் மாற்றம் தொடா்பான சிறப்பு நோ்காணல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு, மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேந்திர விஜய் தலைமை வகித்தாா். இலவச விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக, கடந்த 2003, ஏப்ரல் 1 முதல் 2013, மாா்ச் 31-ஆம் தேதி வரை பதிவு செய்துள்ளவா்களுக்கு தயாா்நிலை பதிவுக் கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற 89 விவசாயிகளுக்கு பெயா் மாற்றம், 19 விவசாயிகளுக்கு புல எண் மாற்றம், 3 விவசாயிகளுக்கு புல எண், பெயா் மாற்றம் என 111 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்படாததால் 5 மனுக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதில், உதவிச் செயற்பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.