பெரம்பலூர்

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், எசனை கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ந. வெங்கடேசன் (43). இவா், வெள்ளிக்கிழமை காலை எசனை பெட்ரோல்

விற்பனை நிலையம் அருகே தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியே வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன்

மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி மாலையில் வெங்கடேசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, திருச்சி மாவட்டம், லால்குடி அருகிலுள்ள புதூா் பாளையத்தைச் சோ்ந்த க. ரமேஷ்குமாரை (36) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT