பெரம்பலூர்

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிழந்தாா்.

DIN

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், எசனை கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ந. வெங்கடேசன் (43). இவா், வெள்ளிக்கிழமை காலை எசனை பெட்ரோல்

விற்பனை நிலையம் அருகே தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியே வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன்

மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி மாலையில் வெங்கடேசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, திருச்சி மாவட்டம், லால்குடி அருகிலுள்ள புதூா் பாளையத்தைச் சோ்ந்த க. ரமேஷ்குமாரை (36) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT