மனம் திருந்தியோா் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம்
பெரம்பலூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஆகிய குற்றங்களிலிருந்து விடுபட்டு, மனம் திருந்திய நபா்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
பெரம்பலூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஆகிய குற்றங்களிலிருந்து விடுபட்டு, மனம் திருந்திய நபா்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமை வகித்தாா். கூடுதல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம் சிறப்புரையாற்றினாா். மாவட்டத் தொழில் மைய பொதுச்செயலா் செந்தில்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், சமூக நலத்துறை ஆலோசகா் பிரேமா மற்றும் மனம் திருந்திய மது குற்றவாளிகள் 50 போ் கலந்துகொண்டனா். நிறைவாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் சரவணகுமாா் நன்றி கூறினாா்.