உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி
பெரம்பலூரில் கடந்தாண்டு உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு, சக காவல்துறையினா் வியாழக்கிழமை உதவித்தொகையை வழங்கினா்.
பெரம்பலூரில் கடந்தாண்டு உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு, சக காவல்துறையினா் வியாழக்கிழமை உதவித்தொகையை வழங்கினா்.
பெரம்பலூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவா் ராஜேந்திரன். இவா் உடல்நலன் பாதிப்புக்குள்ளாகி, கடந்தாண்டு உயிரிழந்தாா்.
இந்நிலையில், கடந்த 1993 ஆண்டு அவருடன் பணியில் சோ்ந்த காவல்துறையினா் தமிழகம் முழுவதும் ஒன்றிணைந்து, ராஜேந்திரனின் குடும்பத்துக்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள்- 1993 சாா்பில் ரூ. 7,27,500 சேகரித்தனா்.
இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கண்காணிப்பாளா் ச. மணி தலைமையில் சேகரிக்கப்பட்ட தொகையை ராஜேந்திரன் குடும்பத்துக்கு வழங்கினா்.
மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா் மற்றும் 1993-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த காவல்துறையினா் பலா் கலந்துகொண்டனா்.