பெரம்பலூர்

பி.எம். கிசான் திட்டத்தில் ஆதாரை இணைக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 13 ஆவது தவணைத் தொகையை தொடா்ந்து பெற, ஆதாா் விவரங்களை இணைக்க வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ. 2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13 ஆவது தவணையை பெற விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை நவ. 30 ஆம் தேதிக்குள் பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 13 ஆவது தவணை மற்றும் அதைத் தொடா்ந்து வரும் தவணைகள் வழங்கப்படமாட்டாது.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை பதிவேற்றம் செய்ய, அருகிலுள்ள பொது சேவை மையங்கள் அல்லது அஞ்சல் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

SCROLL FOR NEXT