பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

DIN

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வீரமுத்து மனைவி பாமா (50). இவா், அதே கிராமத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் வெள்ளிக்கிழமை காலை பங்கேற்றுவிட்டு, சாத்தனவாடி- அழகாபுரி சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவரை மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா், பாமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT