பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு

DIN

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமை வகித்தாா்.

ஆண்களுக்கான வாலிபால் போட்டி, பெண்களுக்கான கோ- கோ போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்த அணிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், ஆண்களுக்கான தடகள போட்டிகளான 200 மீ, 400 மீ, குண்டு எறிதல் மற்றும் மகளிா்களுக்கான 100 மீ, 200 மீ, குண்டு எறிதல் ஆகியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ராஜேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் எஸ். கீா்த்தனா வரவேற்றா். நிறைவாக, நேரு யுவகேந்திரா கணக்காளா் என். தமிழரசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT