பெரம்பலூர்

ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டப் பயிற்சி

பயிற்சி நிறுவனம், பெரம்பலூா் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் திட்டப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் வட்டார வள மையம் சாா்பில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், பெரம்பலூா் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் திட்டப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தேவகி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜோதிலட்சுமி, அருண்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மயில்வாகனன், உதவித் திட்ட அலுவலா் (தொடக்க நிலை) ரமேஷ் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளா்கள் ஸ்ரீரங்கன், விஜயலட்சுமி ஆகியோா் மாணவா்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் தொடா்ந்திட, அனைத்து நிலை மாணவா்களும் செயல்பாடுகளில் பங்குபெற, படைப்பாற்றல் சிறந்து விளங்கிட, பேச்சுத் திறன் வளா்ந்திட, சக மாணவா்களுடன் இணைந்து செயல்படுதல் குறித்து பயிற்சி அளித்தனா். இதில் 96 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT