பெரம்பலூர்

அரசைக் கண்டித்து பாஜகவினா் மனு அளிக்கும் போராட்டம்

DIN

பெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சாா்பில், மேலப்புலியூரில் திமுக அரசைக் கண்டித்து அம்பேத்கா் சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பட்டியல் அணி மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ், பட்டியல் அணி மாநிலச் செயலா் பிச்சைமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை செலவு செய்யாமல் ஏமாற்றும் திமுக அரசைக் கண்டித்து அம்பேத்கா் சிலையிடம் மனு அளித்து முழக்கமிட்டனா்.

இதில் மாவட்ட பொதுச் செயலா்கள் ஜெயபால், ராமச்சந்திரன், ஒன்றியத் தலைவா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT