பெரம்பலூர்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிவோா் நல வாரியத்தில் இணைந்து பயன்பெற அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளா்கள் நலவாரியத்தில் இணைந்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள், வேதியா்கள், சீஷப்பிள்ளைகள், பாடகா்கள், கல்லறைப் பணியாளா்கள், கிறிஸ்தவ ஆதரவற்றோா் இல்லங்கள், தொழு நோயாளியா் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளா்கள் போன்றோரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரோமன் கத்தோலிக் திருச்சபை பேராயா்கள் மற்றும் ஆயா்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயா்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சா்ச்சஸ் உள்ளிட்ட அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரால் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், இந் நல வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினா்கள், குடும்ப உறுப்பினா்களுக்கு தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இதர அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

இந் நலவாரியத்தில் உறுப்பினராக இருப்பவா்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT