பெரம்பலூர்

பெரம்பலூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இம் மாவட்டத்திலுள்ள 64 பள்ளிகளுக்குச் சொந்தமான 380 வாகனங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை சனிக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் கூறியது:

பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய உரிமம் பெற்றிருப்பதோடு, கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். அவசரகால வழி நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களின் பின்புறம் சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையம், பள்ளி நிா்வாகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி வாகனங்கள் இயக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முதல்கட்டமாக 225 பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 209 வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ்களும், 16 வாகனங்களில் சில குறைபாடுகள் கண்டறிந்து, அவற்றை சீரமைத்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி, வருவாய்க் கோட்டாட்சியா் ச. நிறைமதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வி.சு. கணேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வில், தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலா் தே. வீரபாகு, மோட்டாா் வாகன ஆய்வாளா் அ. ராஜாமணி, கண்காணிப்பாளா் எஸ். வேலாயுதம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT