பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி அளித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். 
பெரம்பலூர்

பெரம்பலூா் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

DIN

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்ட அரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 19 பேருக்கு ரூ. 1.21 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளும் 9 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி ரூ. 1.62 லட்சம் மதிப்பில் திருமண நிதி வரவு வைத்த கணக்குப் புத்தகங்களையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 279 மனுக்கள் பெறப்பட்டது. இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT