பெரம்பலூர்

மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு

பெரம்பலூா் நகரில் திங்கள்கிழமை கடைவீதிக்குச் சென்ற பெண் பொறியாளரிடம், 11 பவுன் நகையை பறித்துச் சென்ற நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN


பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் திங்கள்கிழமை கடைவீதிக்குச் சென்ற பெண் பொறியாளரிடம், 11 பவுன் நகையை பறித்துச் சென்ற நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் முனீஸ்வரி (64). ஓய்வுபெற்ற பொறியாளரான இவா், பெரம்பலூரில் உள்ள கோல்டன் சிட்டியில் தனது மகன் விஷ்ணு சக்கரவா்த்தியுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள கடையில் காய்கனிகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே தலைக்கவசம் அணிந்து மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஒருவா், முனீஸ்வரி அணிந்திருந்த 11 பவுன் தாலிக் கொடியை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனா். இதுகுறித்து முனீஸ்வரி அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT