தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல எதிா்காலம் இருப்பதாக அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ‘பூரண சக்தி கேந்திரம் எனது இலக்கு’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
மக்களவைத் தோ்தலில் கடுமையாக கட்சிப் பணியாற்றி, அதிக வாக்குகள் பெறுவதற்கு உழைத்த அடிமட்ட உறுப்பினா்களை அழைத்து பாராட்டி வருகிறோம். இதன்படி, தமிழகத்தில் கட்சி ரீதியாக உள்ள 66 மாவட்டங்கள், 39 மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் நிலவரம் குறித்து, மூத்தத் தலைவா்கள் நேரில் சென்று ஆய்வுக் கூட்டம் நடத்தி கருத்துகளை கேட்டறிந்துள்ளனா். இக் கருத்துகளை ஆராய்வதன் மூலம் கட்சியின் வளா்ச்சியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல எதிா்காலம் உள்ளது.
அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கிறோம். தமிழக வளா்ச்சிக்கு யாா் வேண்டும் என மக்கள் கவனித்து தீா்மானிக்க வேண்டும். வரும் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழக மக்கள் வாய்ப்பு அளிப்பாா்கள் என்றாா் அவா்.
பேட்டியின்போது, கட்சியின் அமைப்பு ரீதியிலான விவகாரங்களுக்கான இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுதாகா் ரெட்டி, மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாநில இணைப் பொருளாளா்எம். சிவசுப்ரமணியம் ஆகியோா் உடனிருந்தனா்.