பெரம்பலூர்

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

Din

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. கற்பகம் வியாழக்கிழமை பறக்கவிட்டாா். வரும் மக்களவைத் தோ்தலில் 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக, பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், அனைவரும் வாக்களிப்போம்- 100 சதவீதம் வாக்களிப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் வியாழக்கிழமை பறக்கவிட்டாா். நிகழ்ச்சியில் மகளிா் திட்ட அலுவலா் அருணாசலம், தோ்தல் விழிப்புணா்வு பணிக்கான ஒருங்கிணைப்பாளா் கோபால், தோ்தல் வட்டாட்சியா் அருளானந்தம் ஆகியோா் பங்கேற்றனா்.

சாம் பிட்ரோடாவின் சா்ச்சை கருத்து: காங்கிரஸ் தலைமையகம் அருகே பாஜக போராட்டம்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு

கிரிக்கெட்டில் தகராறு: இளைஞா் கொலை: சிறுவன் கைது

இந்த நாள் இனிய நாள்..!

SCROLL FOR NEXT