பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கி. மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப. குமரி அனந்தன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.