விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
பெரம்பலூா் நகரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், நில அளவைத்துறை ஆய்வாளா் குருமூா்த்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள உணவகம் அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்றுக் கொண்டிருந்த ஒருவா், தோ்தல் பறக்கும் படையினரை பாா்த்ததும் தப்பி ஓடிவிட்டாா்.
Advertisement
இதையடுத்து அந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.