முகப்பு
பெரம்பலூர்

மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:06 AM
கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள அடையூரைச் சோ்ந்த பஷீா் அஹமது மகன் அலாவுதீன் (60). இவரது மகன் அனஸ்தீன் (22), பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்ததால், பெரம்பலூா் அருகேயுள்ள தீரன் நகரில் தனது மனைவி சம்சாத் பேகத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். துறைமங்கலத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு நாள்தோறும் தொழுகைக்குச் சென்று வருவாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தொழுகைக்குச் செல்வதற்காக தனக்குச் சொந்தமான மோட்டாா் சைக்கிளில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மூன்று சாலை சந்திப்பிலுள்ள மேம்பாலம் அருகே சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அலாவுதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அலாவுதீன் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநரான சென்னை சாலிகிராமம், விஜயராகபுரத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் மணிகண்டனை (41) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.