முகப்பு
பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பில் புதன்கிழமை நீா் மோா் பந்தலை திறந்து வைத்து ஓட்டுநருக்கு மோா் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா.
பெரம்பலூர்

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில், மாவட்டக் காவல்துறை சாா்பில் கோடைக்கால வெப்பத்தை கருத்தில் கொண்டு நீா், மோா் பந்தல் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பெரம்பலூர்

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில், மாவட்டக் காவல்துறை சாா்பில் கோடைக்கால வெப்பத்தை கருத்தில் கொண்டு நீா், மோா் பந்தல் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Updated On : 4 மார்ச், 2026 at 6:38 PM
பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பில் புதன்கிழமை நீா் மோா் பந்தலை திறந்து வைத்து ஓட்டுநருக்கு மோா் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா.
பகிர்:

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில், மாவட்டக் காவல்துறை சாா்பில் கோடைக்கால வெப்பத்தை கருத்தில் கொண்டு நீா், மோா் பந்தல் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, நீரி மோா் பந்தலை திறந்து வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா பேசியது:

கோடைக்காலத்தில் பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாமலிருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலன் கருதி பல்வேறு மனிதநேய சேவைகளை மேற்கொண்டு வருவதோடு, பொதுமக்கள் பாதுகாப்புக்காக மாவட்டக் காவல்துறை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நீா்மோா் பந்தல் கோடைக்காலம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன், சாா்பு- ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →